ஆலய வழிபாட்டிலும் வாழ்வாதாரத்திலும் இராணுவத் தலையீடு - வட்டுவாகல் மக்கள் கொதிப்பு
வட்டுவாகலிலேயே எங்களைச் சுடுங்கள் – ஒளிப்படம் எடுத்த கடற்படையினரிடம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
வட்டுவாகலிலேயே எங்களைச் சுடுங்கள் – ஒளிப்படம் எடுத்த கடற்படையினரிடம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
எங்கள் மத வழிபாட்டிலும், எங்கள் வாழ்வாதாரத் தொழிலிலும் இராணுவத் தலையீடு இருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது என வட்டுவாகல் மக்கள் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு வட்டுவாகலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சப்தகன்னிமார் அம்மன் ஆலயப் பாரம்பரிய வழிபாட்டில் தொடர்ந்து இராணுவம் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆண்டாண்டு காலமாக எமது முன்னோர்களால் பின்பற்றப்பட்டுவந்த வழிபாட்டு முறையை நாம் இப்போது பின்பற்ற முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அடுத்து வரும் சில மாதங்களில் ஆரம்பமாகும் ஆலயத் திருவிழாவின்போது ஆலயத்தில் இருந்து கடற்கரைக்குச் சென்று நீரைப் பெற்று வந்து அந்த நீரில் விளக்கு எரியும் அற்புத வழிபாட்டைச் செய்து வருவது வழமை.
கடந்த பல வருடங்களாக எங்கள் பாரம்பரிய வழிபாட்டு முறையை சிறந்த முறையில் பின்பற்ற முடியாத நிலையில் உள்ளோம்.
வட்டுவாகல் நந்திக் கடற்கரையில் முகாம் அமைத்துள்ள இராணுவம் கடற்கரைக்குச் செல்லும் வீதியை மூடி வைத்துள்ளது. இதனால் எங்கள் மதவழிபாட்டை சுதந்திரமாக முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. சுதந்திரமாக மதவழிபாட்டை மேற்கொள்வதற்கும், கடற்தொழிலை வட்டுவாகல் நந்திக் கடலில் செய்வதற்கும் அனுமதிக்கவேண்டும்.
எங்கள் காணிகளைப் பலவந்தமாகச் சுவீகரித்து முகாம் அமைத்துள்ள இராணுவம் வெளியேறுவதன் ஊடாகவே இதனை உறுதிப்படுத்த முடியும்-என்றனர்.